Fairness cream நிஜமான முகம் கோரமானவையே!!
7 நாட்களில் அழகான பொன்னிற சர்மம், சிகப்பழகு, வசீகரம்
அப்படியே தன்னம்பிக்கை வளர்ந்து உலகை வெல்லலாம் என்றெல்லாம் விளம்பரங்கள்
வரிசையில் வந்து உங்கள் அழகை உயர்த்த வரிந்து கட்டி நின்றாலும், அந்த
களிம்புகளின் (Fairness cream) நிஜமான முகம் கோரமானவையே.
வெளிர்
சர்மத்தின் மீதுள்ள மோகத்தால் ஆண்களும் இந்த களிம்புகளை
பயன்படுத்துகின்றனர். நிறம் மாறவில்லை என்றால் பணம் வாபஸ் என்ற
உத்திரவாதத்தோடு வரும் இந்த களிம்புகள் பெரும்பாலும் சர்ம நிறத்தை
மாற்றுகின்றது, கூடவே தோல் புற்றுநோய், சிறுநீரக கோளாறுகள், சர்ம
நோய், நரம்பு தளர்ச்சி, வெண்புள்ளிகள், அரிப்பு, முகப்பருக்கள் என்று பல
இலவச இணைப்புகளையும் தருகின்றன. சிகப்பழகிற்காக நாம் கொடுக்கப்போகும்
விலை தான் அதிகம்.
உண்மையில், சர்மத்தின் நிறம் மரபு சார்ந்த ஒரு
விஷயமாக இருந்தாலும், சூரிய ஒளியின் தாக்கமே நம்முடைய நிறத்தை
தீர்மானிக்கின்றது. எப்படி?
நாம் வாழும் Tropical Region-ல் இடத்தில்
சூரிய கதிர்வீச்சு அதிகமாக (UV Rays or Ultra violet rays) இருக்கும்.
இந்த கதிர்கள் நம் சர்மத்திற்கு சரியானதல்ல. சர்ம அரிப்பு, சர்மவறட்சி
போன்றபாதிப்புகள் உண்டுசெய்யும். இந்த தீய கதிர்களிலிருந்து நம்மை
பாதுகாக்கவே நம் சர்மத்தில் மெலனின் (Melanin) என்ற நிறமி (Pigment)
உள்ளது. நம்மீது விழும் சூரிய கதிர்களின் அளவினைப் பொறுத்து இந்த
நிறமிகளின் உற்பத்தி அதிகரிக்கும். இப்போது உங்களுக்கு புரியுமே..
அதிக சூரிய கதிர்வேச்சு
அதிக மெலனின் உற்பத்தி
குறைந்த UV Rays பாதிப்பு
மேல்நாடுகளில்
மக்கள் Sun bath என்ற முறையில் பரவலாக தங்கள் சர்மத்தின் மெலனின் அளவினை
அதிகமாக்க முற்படுகிறார்கள். பூமியின் ஓசோன் மண்டலத்தின் சேதம் காரணமாக
சூரிய கதிர்வீச்சில் உள்ள UV rays அளவு எப்போது இருந்ததைவிட இப்போது
அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. இந்த வேளையில், இங்கு உள்ள
UV radiation அளவும் அதிகமே. சரி, இதற்கும் சிகப்பழகு களிம்பிற்க்கும்
என்ன தொடர்பு என்று வியக்க வேண்டாம்...
இந்த களிம்புகளில்
சேர்க்கப்படும் மூலப்பொருள்கள் UV கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து நம்மை
காக்கும் மெலனின் உற்பத்தியை குறைத்து அல்லது சில சமயம் தடை செய்து, Sun
screen என்ற ரீதியில் மெலனின் நிறமியின் உற்பத்தியை தடுக்கின்றது, இதனால்
நம் நிறம் கருப்பதில்லை, இது கவசமின்றி போர் புரிவதற்கு ஒப்பாகும்.
சிலவகை களிம்புகளில் Hydroquinone என்ற வேதிப்பொருள் செர்க்கபடுகின்றது,
இது சர்மத்தை Bleach செய்வதன் மூலம் வெண்மையான தோற்றத்தை அளிக்கின்றது.
இதுவே அவர்கள் ஏழு நாட்களுக்குள் வெண்மை என்றளிக்கும் உத்திரவாதத்தின்
அடிப்படை. ஆய்ந்து பார்த்தால், இந்த களிம்புகளை தொடர்ந்து
பயன்படுத்தும்போது வெண்மையான சர்மம் நமக்கு கிடைக்கும், ஆனால் நமக்கு
கவச-குண்டலாமாக நம்முடன் பிறந்த மெலனின் நிறமியின் பாதுகாப்பு அரணை
நாளடைவில் இழக்க நேரிடும் என்பதே கசப்பான உண்மை.
சித்த மருத்துவத்தில்
உலோகங்கள் (metals) மற்றும் ஸ்டிராய்ட்ஸ் (steroids) உள்ளது, அவை
சிறுநீரக செயளிழப்பிற்கு வழி செய்யும், என்று உண்மை தெரியாமல் அரைக்கூவல்
விடுபவர்களுக்கு ஒரு செய்தி, சிகப்பழகு களிம்புகளின் பிராதான
மூலபோருள்கள் cortico steroids and clobetasol propionate. இவை நம்முடைய
சர்மத்தை சீர்குலைக்கும் தன்மை உடையது. அதாவது, இந்த களிம்புகளை
பயன்படுத்தும் போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, நம் சர்மத்தை
இளமையாக வைத்திருக்கும், ஆனால் தொடர்ந்து உபயோகப்படுத்தாமல்
விட்டுவிட்டால் சர்மம் நலிவடைந்து சுருக்கங்கள் அதிகரித்து, பருக்கள்,
வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் தோன்றும். அடுத்தபடியாக, Mercury கலந்த
சிகப்பழகு களிம்புகளில் உள்ள உலோகம் சர்மம் வழியாக உடல்புகுந்து, நரம்பு
மண்டலத்தை தாக்கி, சிறுநீரகத்தில் தங்கி, அதனை செயலிழக்க செய்கின்றது.
மலிவான களிம்புகளில் கலக்கப்படும் அமோனியா சர்மத்தில் புண்களையும்,
அரிப்புகளையும் ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் FDA, கென்யா, ஜப்பான், ஐரோப்பா நாடுகளும் இந்த வகை களிம்புகளை தடை செய்துள்ளது.
ஆயுர்வேத
முறைப்படி செய்யப்பட்ட களிம்புகள் என்று விளம்பரபடுத்தப்படும்
களிம்புகளும் உண்மையில் Hydroquinone, Kojic Acid ñŸÁ‹ Retinoic Acid
கலப்புகள் இல்லாமல் செய்யப்படுவதில்லை. உண்மையில் பாரம்பரிய மூலிகைகள்
கொண்டு செய்யப்படும் களிம்புகள் இவ்வளவு மலிவான விலையில் செய்ய முடியாது
என்பதே நடைமுறை உண்மை.
காசு கொடுத்து வினையை விலைக்கு வாங்கும் வழி தான் இந்த சிகப்பழகு களிம்பு. வெண்மைக்கு பின் இருக்கும் கருப்பு உண்மை இதுதான்.
சர்மத்தை பாதுகாக்க நம் வீட்டிலேயே பல இயற்கையான பாதுகாப்பான வழிகள் உள்ளன,
தினமும் ஒரு முறை பன்னீர் 20 மில்லி + குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவிவிடவும்.
சோற்றுகற்றாழை மடலை வெட்டி அதனுள் இருக்கும் குழகுழப்பான சோற்றை குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிடவும்.
வெட்டிவேர் + சந்தனத்தை அரைத்து பூசி பின் பாசிப்பருப்பு பொடியில் கழுவ முகம் பொலிவடையும்.
பெண்கள்
மஞ்சள் பூசி குளிப்பதனால் முகம் பிரகாசமடைந்து, எண்ணெய் வடியாமல்,
கரும்புள்ளிகள்- பருக்கள் நீங்கி, அழகாவும் - இளமையுடனும் முகத்தை
வைத்திருக்கலாம்.
-பாலாஜி, மூலிகைமணி +91-9094777222
7 நாட்களில் அழகான பொன்னிற சர்மம், சிகப்பழகு, வசீகரம்
அப்படியே தன்னம்பிக்கை வளர்ந்து உலகை வெல்லலாம் என்றெல்லாம் விளம்பரங்கள்
வரிசையில் வந்து உங்கள் அழகை உயர்த்த வரிந்து கட்டி நின்றாலும், அந்த
களிம்புகளின் (Fairness cream) நிஜமான முகம் கோரமானவையே.
வெளிர்
சர்மத்தின் மீதுள்ள மோகத்தால் ஆண்களும் இந்த களிம்புகளை
பயன்படுத்துகின்றனர். நிறம் மாறவில்லை என்றால் பணம் வாபஸ் என்ற
உத்திரவாதத்தோடு வரும் இந்த களிம்புகள் பெரும்பாலும் சர்ம நிறத்தை
மாற்றுகின்றது, கூடவே தோல் புற்றுநோய், சிறுநீரக கோளாறுகள், சர்ம
நோய், நரம்பு தளர்ச்சி, வெண்புள்ளிகள், அரிப்பு, முகப்பருக்கள் என்று பல
இலவச இணைப்புகளையும் தருகின்றன. சிகப்பழகிற்காக நாம் கொடுக்கப்போகும்
விலை தான் அதிகம்.
உண்மையில், சர்மத்தின் நிறம் மரபு சார்ந்த ஒரு
விஷயமாக இருந்தாலும், சூரிய ஒளியின் தாக்கமே நம்முடைய நிறத்தை
தீர்மானிக்கின்றது. எப்படி?
நாம் வாழும் Tropical Region-ல் இடத்தில்
சூரிய கதிர்வீச்சு அதிகமாக (UV Rays or Ultra violet rays) இருக்கும்.
இந்த கதிர்கள் நம் சர்மத்திற்கு சரியானதல்ல. சர்ம அரிப்பு, சர்மவறட்சி
போன்றபாதிப்புகள் உண்டுசெய்யும். இந்த தீய கதிர்களிலிருந்து நம்மை
பாதுகாக்கவே நம் சர்மத்தில் மெலனின் (Melanin) என்ற நிறமி (Pigment)
உள்ளது. நம்மீது விழும் சூரிய கதிர்களின் அளவினைப் பொறுத்து இந்த
நிறமிகளின் உற்பத்தி அதிகரிக்கும். இப்போது உங்களுக்கு புரியுமே..
அதிக சூரிய கதிர்வேச்சு
அதிக மெலனின் உற்பத்தி
குறைந்த UV Rays பாதிப்பு
மேல்நாடுகளில்
மக்கள் Sun bath என்ற முறையில் பரவலாக தங்கள் சர்மத்தின் மெலனின் அளவினை
அதிகமாக்க முற்படுகிறார்கள். பூமியின் ஓசோன் மண்டலத்தின் சேதம் காரணமாக
சூரிய கதிர்வீச்சில் உள்ள UV rays அளவு எப்போது இருந்ததைவிட இப்போது
அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. இந்த வேளையில், இங்கு உள்ள
UV radiation அளவும் அதிகமே. சரி, இதற்கும் சிகப்பழகு களிம்பிற்க்கும்
என்ன தொடர்பு என்று வியக்க வேண்டாம்...
இந்த களிம்புகளில்
சேர்க்கப்படும் மூலப்பொருள்கள் UV கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து நம்மை
காக்கும் மெலனின் உற்பத்தியை குறைத்து அல்லது சில சமயம் தடை செய்து, Sun
screen என்ற ரீதியில் மெலனின் நிறமியின் உற்பத்தியை தடுக்கின்றது, இதனால்
நம் நிறம் கருப்பதில்லை, இது கவசமின்றி போர் புரிவதற்கு ஒப்பாகும்.
சிலவகை களிம்புகளில் Hydroquinone என்ற வேதிப்பொருள் செர்க்கபடுகின்றது,
இது சர்மத்தை Bleach செய்வதன் மூலம் வெண்மையான தோற்றத்தை அளிக்கின்றது.
இதுவே அவர்கள் ஏழு நாட்களுக்குள் வெண்மை என்றளிக்கும் உத்திரவாதத்தின்
அடிப்படை. ஆய்ந்து பார்த்தால், இந்த களிம்புகளை தொடர்ந்து
பயன்படுத்தும்போது வெண்மையான சர்மம் நமக்கு கிடைக்கும், ஆனால் நமக்கு
கவச-குண்டலாமாக நம்முடன் பிறந்த மெலனின் நிறமியின் பாதுகாப்பு அரணை
நாளடைவில் இழக்க நேரிடும் என்பதே கசப்பான உண்மை.
சித்த மருத்துவத்தில்
உலோகங்கள் (metals) மற்றும் ஸ்டிராய்ட்ஸ் (steroids) உள்ளது, அவை
சிறுநீரக செயளிழப்பிற்கு வழி செய்யும், என்று உண்மை தெரியாமல் அரைக்கூவல்
விடுபவர்களுக்கு ஒரு செய்தி, சிகப்பழகு களிம்புகளின் பிராதான
மூலபோருள்கள் cortico steroids and clobetasol propionate. இவை நம்முடைய
சர்மத்தை சீர்குலைக்கும் தன்மை உடையது. அதாவது, இந்த களிம்புகளை
பயன்படுத்தும் போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, நம் சர்மத்தை
இளமையாக வைத்திருக்கும், ஆனால் தொடர்ந்து உபயோகப்படுத்தாமல்
விட்டுவிட்டால் சர்மம் நலிவடைந்து சுருக்கங்கள் அதிகரித்து, பருக்கள்,
வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் தோன்றும். அடுத்தபடியாக, Mercury கலந்த
சிகப்பழகு களிம்புகளில் உள்ள உலோகம் சர்மம் வழியாக உடல்புகுந்து, நரம்பு
மண்டலத்தை தாக்கி, சிறுநீரகத்தில் தங்கி, அதனை செயலிழக்க செய்கின்றது.
மலிவான களிம்புகளில் கலக்கப்படும் அமோனியா சர்மத்தில் புண்களையும்,
அரிப்புகளையும் ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் FDA, கென்யா, ஜப்பான், ஐரோப்பா நாடுகளும் இந்த வகை களிம்புகளை தடை செய்துள்ளது.
ஆயுர்வேத
முறைப்படி செய்யப்பட்ட களிம்புகள் என்று விளம்பரபடுத்தப்படும்
களிம்புகளும் உண்மையில் Hydroquinone, Kojic Acid ñŸÁ‹ Retinoic Acid
கலப்புகள் இல்லாமல் செய்யப்படுவதில்லை. உண்மையில் பாரம்பரிய மூலிகைகள்
கொண்டு செய்யப்படும் களிம்புகள் இவ்வளவு மலிவான விலையில் செய்ய முடியாது
என்பதே நடைமுறை உண்மை.
காசு கொடுத்து வினையை விலைக்கு வாங்கும் வழி தான் இந்த சிகப்பழகு களிம்பு. வெண்மைக்கு பின் இருக்கும் கருப்பு உண்மை இதுதான்.
சர்மத்தை பாதுகாக்க நம் வீட்டிலேயே பல இயற்கையான பாதுகாப்பான வழிகள் உள்ளன,
தினமும் ஒரு முறை பன்னீர் 20 மில்லி + குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவிவிடவும்.
சோற்றுகற்றாழை மடலை வெட்டி அதனுள் இருக்கும் குழகுழப்பான சோற்றை குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிடவும்.
வெட்டிவேர் + சந்தனத்தை அரைத்து பூசி பின் பாசிப்பருப்பு பொடியில் கழுவ முகம் பொலிவடையும்.
பெண்கள்
மஞ்சள் பூசி குளிப்பதனால் முகம் பிரகாசமடைந்து, எண்ணெய் வடியாமல்,
கரும்புள்ளிகள்- பருக்கள் நீங்கி, அழகாவும் - இளமையுடனும் முகத்தை
வைத்திருக்கலாம்.
-பாலாஜி, மூலிகைமணி +91-9094777222
ஒவ்வொருவரும் அழகிற்க்கு கொடுக்கும் விளக்கம் வேறு, ஆனால் தாங்கள் கூறியது போல், அழகின் வடிவம் பெரும்பாலோர் மனதில் தோலின் நிறம் சார்ந்தே அமைந்துள்ளது. மிகவும் தெளிவான பார்வை. நல்ல கருத்து.
ReplyDeletearumaiyana vilakkam
ReplyDelete